Home » மீண்டும் சொந்த நாடான அமெரிக்கா செல்ல தயாராகும் கோட்டாபய

மீண்டும் சொந்த நாடான அமெரிக்கா செல்ல தயாராகும் கோட்டாபய

Source

தற்போது தாய்லாந்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, அமெரிக்க கிரீன் கார்டு லாட்டரியை பெறும் நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன் தனது குடியுரிமையை திரும்பப் பெற்றார்.

எவ்வாறாயினும், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அமெரிக்க பிரஜைகள் என்பதால், முன்னாள் ஜனாதிபதி தனது குடியுரிமையை மீளப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அமெரிக்க குடியுரிமையை துறந்தவருக்கு அதை திரும்ப வழங்க அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தற்போது தாய்லாந்தில் இருக்கும் திரு கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக உதயங்க வீரதுங்க நேற்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image