மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் மற்றும் சட்ட விரோதமான முறைகளில் பணம் பெறுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
அந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.