இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த மாநகர முதல்வர் வேடபாளராக சொலமன் சூ சிறில் பிரேரிக்கப்படவுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இ.ஆனலட் பதவி இழந்த நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திறகு எதிர் வரும் 10ஆம் திகதி புதிய முதல்வர் தேர்வு சபை மண்டபத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இவ்வாறு இடம்பெறவுள்ள முதல்வர் தேர்வின்போது தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் இன்று காலை கட்சியின் தலைமை பணிமனையில் கடசியின் தலைவரின் முன்னியில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டது.
இதறகமைய 10ஆம் திகதி இடம்பெறவுள்ள முதல்வர் தேர்வில் கட்சியின் சார்பில் மாநகர முதல்வரா சொலமன் சூ சிறில் நிறுத்தப்படவுள்ளார்.
இதேநேரம் மாநகர முதல்வர் தேர்விற்கு எதிராக மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தொடுத்த வழக்கிற்கு நாளை மறுதினம் மேன் முறையீட்டு நீதிமன்றினால் ஓர் இடைக்கால கட்டளை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போதிருந்த முதல்வர் பதவி இழந்து நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
TL