ரயில்வே திணைக்களத்தில் ரயில்வே அலுவலக உதவியாளர்கள் மூவாயிரம் பேரை இணைக்க திட்டம்
ரயில்வே திணைக்களத்தில் ரயில்வே அலுவலக உதவியாளர்கள் மூவாயிரம் பேரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ரயில் சேவையை உறுதி செய்வதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பு, அரச சேவையில் உள்வாங்கப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் உறுப்பினர்களில் இருந்து மேற்கொள்ளப்பட உள்ளது. அமைச்சரவை மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.