டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
‘தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்யவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மக்கள் கொந்தளிப்பைச் சமாளிக்கவும், மக்களை ஏமாற்றவும் இந்தக் கட்டுக்கதை பயன்படுகின்றது. நாடு அபிவிருத்தி அடைந்து வருகின்றது என்றும் தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூட கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய வங்கி முடிவுகளை எடுப்பதில்லை . இதிலும் அரசாங்கத்தின் உந்துதல் காணப்படுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
TL