Home » ரோகிங்கியர்கள் சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதனை.

ரோகிங்கியர்கள் சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதனை.

Source

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்து காப்பாற்றப்பட்ட  104 ரோகிங்கியர்களும் காங்கேசன்துறை பொலிசார் ஊடாக சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பர்மாவில் இருந்து விரட்டப்பட்ட ரோகிங்கிய இன  முஸ்லீம்கள் பங்களாதேசில் அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேசியாவிற்கு படகு மூலம்  பயணித்தபோதே   நடுக்கடலில் படகு பழுதடைந்து 3 வாரங்களாக நடுக் கடலில் தத்தளித்துள்ளனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் நேற்று முன்தினம் இலங்கை  கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு  நேற்றைய தினம்  கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட 104 பேரில் இருவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 102 பேரும் நேற்று இரவு 10 மணியளவில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் அடிப்படையில் இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு யு.என்.எச்.சி.ஆரின் பராமரிப்பில் அனுப்பி வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image