விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்காக 31 விவசாயய தொழில் முனைவோர் நிறுவனங்களை ஆரம்பிக்க இளைஞர் சேவை மன்றம் நடவடிக்கை
விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்காக 31 விவசாயய தொழில் முனைவோர் நிறுவனங்களை ஆரம்பிக்க இளைஞர் சேவை மன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக முன்வைத்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பலனாக இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதாக இளைஞர் சேவை மன்றத்தின் பயிற்சிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வணிகத்தில் நுழைவதற்கு தேவையான அறிவை வழங்குவது இதன் நோக்கம்.
பொருட்களுக்கு தேவையான சந்தையை அமைத்துக் கொடுப்பது மற்றுமொரு எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.