அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு 550 இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதா வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவிப்பு.
அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு 550 இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதா வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத்தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 250 தாதியர்கள், 100 இரசாயன ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள், 200 தாதி உதவியாளர்கள் ஆகியோருக்கு அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக இது பற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.