நாட்டை கட்டியெழுப்புதவற்காக சமர்ப்பித்த கொள்கைகளுக்காகவே மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வாக்களித்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஆனால் சில குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் கொலை செய்து பயங்கரவாதத்தை பரப்பி தமது கட்சியை மௌனிக்கச் செய்ய முயன்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியல்வாதிகள், நாட்டின் சொத்துகளை கொள்ளையிட்டிருந்தால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார்.