ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய கடன் உதவியில் 600 கோடி ரூபா பெறுமதியான நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில்
ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய கடன் உதவியில் 600 கோடி ரூபா பெறுமதியான நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பில் இடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை 400 கோடி ரூபா பெறமதியான பணம் வைப்பில் இடப்பட்டதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ஈ.எம்.எல்.அபயரத்ன எமது நிலையத்திற்குத் தெரிவித்தார். இரண்டு ஹெக்டயர் விஸ்தீரணமான வயலில் நெல்லைப் பயிரிடும் ஒரு விவசாயிக்கு 20 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்பட இருக்கின்றது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் விவசாயிகள் உரிய உதவியை பெற்றுக்கொள்ள தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.