Home » ஆயுர்வேதத் துறையில் இருந்து உயர்ந்த பட்ச நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் நம்பிக்கை

ஆயுர்வேதத் துறையில் இருந்து உயர்ந்த பட்ச நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் நம்பிக்கை

Source
Share Button

சுதேச வைத்தியத் துறையை விரிவான முறையில் சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆயுர்வேதத்துடன் இணைந்த யோகா பயிற்சி முறைமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இதற்கான புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆயுர்வேத வைத்தியர்களின் சேவையை இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கைத்தொலைபேசிகளுக்கான செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பிரதமர் இது பற்றி கருத்து வெளியிட்டார்.
ஆயுர்வேத வைத்தியத்துறையை நாடுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தத் துறையை அடிப்படையாகக் கொண்டு ஆகக்கூடுதலான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது. இலங்கைக்கு மாத்திரம் உரித்தான 180 மூலிகைகள் காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக நாட்டில் ஆயிரத்து 500 மூலிகை வகைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறிளார்.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image