இத்தாலி கடற்பரப்பில் குயேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்நிருக்கிறது. இதில் பயணித்த 12 சிறுவர்கள் உட்பட 59 பேர் உயிரிழந்துள்ளார்கள். இத்தாலியின் தெற்கு கடற்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்றபோது இந்த கடல் பகுதி கொந்நளிப்பான நிலையில் காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த படகில் பயணித்த மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளார்கள். ஆப்கானிஸ்தான், ஈரான், பாக்கிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த குடியேற்வாசிகள் இந்த படகில் பயணித்துள்ளமை தெரிய வந்துள்ளது.