இந்த வருடத்தின் முதலாம் தவணை ஆரம்பமாகும், மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் 34 ஆயிரம் பேர் ஆசிரியர் சேவைக்கு
இந்த வருடத்தின் முதலாம் தவணை ஆரம்பமாகும், மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் 34 ஆயிரம் பேர் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். பட்டதாரிகளும் கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமாதாரிகளும் இதன் கீழ் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அரச சேவையில் ஏற்கனவே பணியாற்றும் 25 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வது பற்றி கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.