இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் மருந்துப் பற்றாக்குறையை தீர்க்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது
இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் மருந்துப் பற்றாக்குறையை தீர்க்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி மற்றும் இந்திய கடன் உதவியை பயன்படுத்தி மருந்து தேவையை பூர்த்தி செய்யவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடன் உதவியிலிருந்து பயன்படுத்தப்படாத நிதி ஒதுக்கீடுகளை சுகாதார அமைச்சுக்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நேரடித் தலையீடு சுகாதார சேவையை பாதிப்படைய அனுமதிக்காது என கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் வலியுறுத்தினார்.