இந்த வருடத்திற்குள் புதிதாக 500 பஸ் வண்டிகள் போக்குவரத்துச் சேவையில் இணைத்துக் கொள்ள ஏற்பாடு
இந்த வருடத்திற்குள் புதிதாக 500 பஸ் வண்டிகள் போக்குவரத்துச் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 75 புதிய பஸ் வண்டிகளை நாடு முழுவதிலும் உள்ள டிப்போக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொருட்டு, பத்தரமுல்ல – ஜப்பான் நட்புறவு மாவத்தையில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுக்குக் கிடைக்கும் பஸ் வண்டிகள் ஜனாதிபதி தலைமையில் வழங்கி வைக்கப்படும். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் இந்த பஸ் வண்டிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.