உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு திறைசேரியுடன் புதிய பேச்சுவார்ததைகளை ஆரம்பிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகியுள்ளது. தேர்தலை நடத்தும் புதிய திகதியை அறிவிப்பதற்காக தேர்தல்கள் அணைக்குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தும் திகதியினை தீர்மானிப்பதற்கு நிதி ஒதுக்கீடு வழங்குவது தொடர்பில் திறைசேரி உறுதிமொழி வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் இரண்டு சந்தர்ப்பங்களில் தேர்தலை பிற்போட்டதாகவும் புஞ்சிஹேவா தெரிவித்தார்.