உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணி வரை தாக்கல் செய்ய சந்தர்ப்பம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது. எதிர்வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். இதேவேளை, கட்டுப்பணம் நாளை நண்பகல் 12 மணி வரை மாவட்ட செயலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படும். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இதற்கான காலம் நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது