எமது கட்சி தனித்துவமாக போட்டியிடுகின்றது – த.ம.வி.பு கட்சி செயலாளர் பூ. பிரசாந்தன்
கிழக்கு மாகாணத்தில் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் உள்ளூராட்சி தேர்தலில் எமது கட்சி படகு சின்னத்தில் தனித்து போட்டிருக்கின்றது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார்.
இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்:,
கிழக்கு மாகாண சபை முறை ஊடாக மக்களின் இருப்பை உறுதிப்படுத்த இம்முறை மக்கள் எமக்கு அதிக. வாக்குகளை வழங்க உள்ளனர். திருகோணமலை அம்பாறை மாவட்ட மக்கள் உள்ளூராட்சி அதிகாரங்களை பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக வேட்பு மனு தாக்கத்தின் போது என்னிடம் தெரிவித்திருந்தனர். இம்முறை தமிழ்த் தேசியம் பேசி எம்மை ஏமாற்ற முடியாது எனவும் எமது கட்சி கிழக்கில் அதிக உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றும்.
கடந்த முறை ஆட்சியை கைப்பற்றிய மட்டு மாநகர சபை எவ்வாறு தமது பணிகளை முன்னெடுத்தது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே இம்முறை கிழக்கு தமிழர்களின் இருப்பை நிலை நிறுத்த அதிக அளவிலான வாக்குகளை மக்கள் எமக்கு வழங்குவார்கள்என்ற நம்பிக்கை உள்ளது.
எமது கட்சி திருகோணமலை 6 உள்ளூராட்சி மன்றங்களிலும் மட்டக்களப்பில் 11 உள்ளூராட்சி மன்றங்களிலும் அம்பாறையில் 3 உள்ளூராட்சி மன்றங்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது.
அதேபோன்று பொதுஜன பெரமுன மொட்டுக்கட்சி அம்பாறை மற்றும் திருவோணமலை மாவட்டங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டு கட்சி கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுக்களை பெற்றிருந்தனர்.
எமது கட்சி தனித்துவமாக போட்டியிடுகின்றது என்பதை அனைவருக்கும் நன்கு அறிந்த விடயம் எனவும் கிழக்கில் முதன்முதலாக கட்டுப்பணத்தை செலுத்திய கட்சி பொதுஜன பெரமுன மொட்டு கட்சியை ஆகுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
AR