Home » கடன்களைத் திருப்பிச் செலுத்த சீனா, இரண்டு வருட அவகாசத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது

கடன்களைத் திருப்பிச் செலுத்த சீனா, இரண்டு வருட அவகாசத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது

Source
Share Button

சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கையின் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான இரண்டு வருட சலுகைக் காலத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் இரண்டு வருடங்களுக்கு இலங்கை சீனாவிற்கான கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்று எக்ஸிம் வங்கி எழுத்து மூலம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 290 கோடி அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒத்துழைப்பையும் சீனா வழங்கவிருக்கின்றது. இலங்கைக்கு கடன் உதவியை வழங்குவதற்கு சீனாவின் ஒத்துழைப்பு அவசியம் என்று சர்வசேத நிதி நிறுவனங்கள் அறிவித்திருந்த நிலையில் சீனாவின் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image