கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்க வேண்டாம் என பிரதமர் ஆலோசனை
கல்வி பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது என பிரதமர் தினேஷ் குனவர்த்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பரீட்சை நடவடிக்கைளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் பிரதேச மட்டத்தில் செயற்படவேண்டும் என்று அவர் கூறினார். ஏராளமான ஆசிரியர்களை பரீட்சை கடமைகளுக்கு இணைத்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவாhத்தையின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.