Home » காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

Source

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் இன்று (ஜன. 13) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ட்விக், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை நேற்று சந்தித்தார்.

தனது விஜயத்தின் போது, பாராளுமன்ற சபாநாயகர், சபைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

N.S

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image