சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கட்ட கடனை இந்த மாதம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர் அந்நாட்டின் தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய செவ்வியின்போதே இந்த விடயத்தை தெரிவித்திருக்கிறார். இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் அமைச்சர் அலிசப்ரிக்கும்; இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கான வசதிகளை எற்படுத்துவது மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.