சில அரசியல் கட்சிகள் தனிப்பட்ட நிகழ்சசி நிரலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலைக் கோரி நிற்பதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவிப்பு
சில அரசியல் கட்சிகள் தனிப்பட்ட நிகழ்சசி நிரலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலைக் கோரி நிற்பதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அறிவித்துள்ளது. எனினும், இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவது பொருத்தமானதா என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.