Home » துறைமுக நகர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளம் சட்டத்தரணிகளுக்கு யோசனை

துறைமுக நகர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளம் சட்டத்தரணிகளுக்கு யோசனை

Source
Share Button துறைமுக நகருக்கான புதிய சட்டக் கட்டமைப்பிற்காக குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளம் சட்டத்தரணிகளிடம் யோசனை முன்வைத்துள்ளார். அதேபோல் பொருளாதார சட்டம் பற்றிய விசேட தெளிவினைப் பெறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். பொருளாதார சட்டம் உட்பட நிதித்துறை மத்திய நிலையமாக துறைமுக நகரை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ரோயல் கல்லூரியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக பங்கேற்ற போதே ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்திருக்கிறார். நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image