நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய சாரதி அனுமதிப்பத்திரத்தை இந்த வருடத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கை
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சாரதி அனுமதிப்பத்திரம் இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குனவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தொழில்நுட்ப பிரிவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி விரைவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் நடத்துவதற்கான திகதியினை தீர்மானித்தால், தேர்தலுக்கு தயாராவது அரசாங்கத்தின் கொள்கைத்திட்டம் என அவர் குறிப்பிட்டார். எனினும் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற நிலையில் அதிக செலவில் தேர்தலை நடத்துவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.