புத்தாண்டில் குறுங்கால, இடைக்கால, நீண்டகால அடிப்படையில் நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்
புத்தாண்டில் குறுங்கால, இடைக்கால, நீண்டகால அடிப்படையில் நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின ;செயலாளர் குணதாச அமரசிங்க தெரிவித்துள்ளார். குறுங்கால வேலைத்திட்;டத்தின் கீழ் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும். விவசாயிகளின் உற்பத்தியை அதிகரித்து, தட்டுப்பாடு இன்றி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது இலக்காகும். இதற்குத் தேவையான நிதி இம்முறை வரவுசெலவுத் தி;ட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மரக்கறி, பழவகைகள், தானியங்கள் என்பவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.