மீனவர்கள் விவகாரம் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் இராஜதந்திர மார்க்கங்கள் ஊடாக தீர்க்கப்பட வேண்டியதாகும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராயலம் வலியுறுத்தியுள்ளது.
இன்றைய தினம் உயர்ஸ்தானிகராலயத்தின் தமது ருவிட்டர் பக்கத்தின் ஊடாக இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்திய மீனவர்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் உயர்ஸ்தானிகராலயம் வலுவாக எடுத்துக் கூறியுள்ளது.
இச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும், மீனவர்களுக்கு எதிராக எந்த வடிவங்களிலும் பலத்தையோ அல்லது வன்முறைகளையோ பிரயோகிக்காமல் இருப்பதனை உறுதி செய்யுமாறும் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
மீனவர்கள் விவகாரம் அவர்களது வாழ்வாதாரத்துடன் தொடர்புடையதும் மனிதாபிமானஅடிப்படையிலானதுமாகும் என்ற உள்ளுணர்வுடன் இருதரப்பு பொறிமுறைகள் மற்றும் இராஜதந்திர மார்க்கங்கள் ஊடாக தீர்க்கப்பட வேண்டியதாகும் என்றும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராயலம் வலியுறுத்தியுள்ளது.
AR