யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் வழங்கிய பதவி விலகல் கடிதத்தை மீள வழங்கி அவர் மூலம் மீண்டும் பாதீட்டை நிறைவேற்றுவதனை ஏற்க முடியாது என ஐ.தே.கட்சியின் சார்பில் ஆளுநரின் செயலாளரிடம் தெரிவித்தோம் என அக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் சி.குலேந்திராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணன் கடந்த 2022-12-30 அன்று பதவி விலகல் கடிதம் வழங்கியதனையடுத்து ஏற்பட்ட நிலையினையடுத்து சபை உறுப்பினர்களை கட்சி ரீதியில் சந்திக்க ஆளுநர் ஏற்பாடு செய்தார். இதற்கமைய மாநகர சபையின் 45 உறுப்பினர்களில் 9 பேர் மட்டும் இன்று ஆளுநர் செயலகத்திற்கு சென்றனர்.
இவ்வாறு சென்றவர்களில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பிலான மூவர் சபைக்கு மீண்டும் பெதிய முதல்வர் தேர்வு இடம்பெற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என எழுத்தில் வழங்கி விட்டு கூட்டத்தில் பங்கேற்காது வெளியேறியதாக தெரிவித்தனர்.
இதேநேரம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் மணிவண்ணன் சார்பிலான அணியை சேர்ந்தோர் மாநகர முதல்வர் சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தினை மீளப் பெற்றுக்கொளவார் எனவும் மீண்டும் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் தருமாறு கோரியதோடு மாறாக புதிய முதல்வர் தேர்விற்கு சென்றல் நீதிமன்றை நாடவுள்ளதாகவும. தெரிவித்தமை தொடர்பில் ஐ.தே.கட்சியின் உறுப்பிர் சார்பில் இதனை தெரிவித்ததாக சி.குலேந்திரராஜா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதேநேரம் இது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனிடம் இவை தொடர்பில் கேட்டபோது,
தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இன்னுமோர் முதல்வர் தேர்விற்கு இடமில்லை அதனால் 3வது முதல்வர் தேர்வு செய்ய முடியாது. முதல்வர் இல்லாதுவிடின் சபையை கலைப்பது ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது அதற்கு நாம் உடன் படுகின்றோம்.
இதேநேரம் ஆளிநர் ஓர் கருத்தை கூறியுள்ளார் அதாவது ஜனாநாயக வழியிலான சபை தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் என விரும்புவதாக அவ்வாறானால் முதல்வரின் பதவி விலகலை நான் ஏற்கவில்லை இரண்டாவது தடவை பாதீட்டை சபையில் சமர்ப்பிக்குமாறு கூறினால் அதனை நிறைவேற்றலாம் எனக் கூறியுள்ளோம் எனப் பதிலளித்தார்.
TL