Home » வடக்கு கிழக்கில் எமது கட்சியின் சின்னத்தில் மட்டுமே போட்டி- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளர்

வடக்கு கிழக்கில் எமது கட்சியின் சின்னத்தில் மட்டுமே போட்டி- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளர்

Source

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமது கட்சி வடக்கு கிழக்கில் தமது கட்சியின் சின்னத்தில் தனித்துவமாக போட்டியிடும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.

இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

கட்சியின் உயர்மட்ட கூட்டத்தின் தீர்மானத்தின்படி கிழக்கு மாகாணத்திலும் வடக்கு மாகாணத்தில் சில பகுதிகளிலும் பொலநறுவை மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் சில பிரதேசங்களிலும் எமது கட்சி எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் எமது கட்சி வடக்கு கிழக்கில் தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக வந்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை.

அதனை தமது கட்சி முற்றாக மறுப்பதாகவும் இம்முறை தேர்தலில் தாம் தனித்து தமது கட்சியின் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊடகங்கள் தமது கட்சி சார்ந்த செய்திகளை வெளியிடும்போது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வெளியிட வேண்டும் எனவும் தேர்தல் காலங்களில் மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

AR

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image