விதிமுறைகளை மீறி போணஸ் வழங்கியமை பற்றி இரண்டு அரச நிறுவனங்களிடம் ஜனாதிபதி விளக்கம் கோரியுள்ளார்
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் விமான சேவை என்பன போனஸ் எனப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்கியுள்ளமை பற்றி ஜனாதி;பதி ரணில் விக்ரமசிங்ஹ உரிய நிறுவனங்களின் தலைவர்களிடம் விளக்கம்கோரியுள்ளார். நட்டத்தை எதிர்நோக்கும கூட்டுத்தாபனங்களும், சபைகளும் ஊக்குவிப்புக் கொடுப்பணவை வழங்கக்கூடாது என்று நிதியமைச்சு அறிவித்திருந்த நிலையில் அதனை மீறி இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தக்கொடுப்பணவை வழங்கியுள்ளன. பெற்றோலியக்கூட்டுத்தாபனம் இரண்டு மாதங்களின் சம்பளத்தை ஊக்குவிப்புக்கொடுப்பனவாக வழங்க 120 கோடி ரூபாவை செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. நட்டத்தில் இயங்கிவரும் நிலையிலும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஒவ்வொரு ஊழியருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியமையும் தெரியவந்துள்ளது.