வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களினாலேயே, நாட்டில் தாங்க முடியாத பொருளாதார சமூக முறை உருவாகியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு
வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களால், நாட்டிற்கு தாங்க முடியாத பொருளாதார சமூக முறையொன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களுக்கும் அங்கு தெளிவூட்டப்பட்டது. நாட்டின் எதிர்காலத்தை சிறுவர்கள் பொறுப்பேற்க வேண்டும். கல்வி மாத்திமன்றி, ஏனைய திறமைகளும் சிறுவர்களிடம் உள்ளன. தான் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில், தொழில்நுட்ப பாடத்திட்டத்தை பாடசாலைகளுக்கு அறிமுகப்படுத்தியதாக அமைச்சர் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பின்னர், நாட்டிற்கு அரசியல் சுதந்திரம் ஏற்பட்டது. அதிலிருந்து பொருளாதார சுதந்திரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். ஆனால் காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டப் பொருளாதார முறையிலிருந்து எம்மால் விடுபட முடியாதுள்ளதாக அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டினார்.