ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பமாகியுள்ளது. லுனுகம்வெஹெர பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பெரலிஹெல பிரதேசத்தில் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் எச்.பி.சுமணசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், லுனுகம்வெஹெர பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடன், இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதற்கும், அரிசியின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும், அடுத்த சில வாரங்களில் நெல் கொள்வனவில் முன்னுரிமை வழங்கப்படும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.