இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை மன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கப் புறப்பட்ட ஓர் ட்ரோளர் விசைப்படகில் இருந்த இந்திய மீனவர்களே இவ்வாறு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை இறங்குதுறைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆறுபேரும் இன்று நீதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்படவுள்ளனர்.
TL