இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட மீனவர்களே இலங்கையின் முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சமயமே இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் விசைப் படகும் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.
10 மீனவர்களும் நாளை காலை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்படவுள்ளனர்.
TL