ஆணைணக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும்; நூற்றுக்கும் மேற்பட்ட ஆலோசனை சபை உறுப்பினர்களின் சேவைகளை இடை நிறுத்த அல்லது மாற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த நிறுவனங்கள் தற்போது தேவையில்லை அல்லது தற்போதுள்ள நிறுவனங்களால் பணிகளை நிறைவேற்ற முடியாமை போன்ற காரணணங்களே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சம்பளம் மற்றும் பணியாளர் சபை, மார்ச் 31ஆம் திகதி முதல் மூடப்பட்டு அதன் செயற்பாடுகள் நிதியமைச்சின் கீழ் உள்ள முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு மாற்றப்படும்.
ஆணைக்குழுவின் 15 அங்கத்தவர்கள் மற்றும் 36 ஏனைய ஊழியர்களுக்காக அரசாங்கம் தற்போது 5.8 மில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது. சம்பள மற்றும் பணியாளர் ஆணையத்தின் செயற்பாடுகள் முன்னர் நிதி மற்றும் பொது நிர்வாக அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் ஊழியர்கள் பொது நிர்வாக அமைச்சினால் உள்வாங்கப்பட்டனர். இதனிடையே, 2021ல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆலோசனைக் குழுவும் மூடப்பட உள்ளது. அந்த நடவடிக்கைகள் ஏற்கனவே நீதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, குறைந்தது 50 ஆணைக்குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களை மூடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளனது. அத்தகைய மேலும் 50 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.