Home » 13 ஆயிரம் ஏக்கரில் பரசூட் முறைமையில் நெற்செய்கை மேற்கொள்ள 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

13 ஆயிரம் ஏக்கரில் பரசூட் முறைமையில் நெற்செய்கை மேற்கொள்ள 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Source
Share Button 13 ஆயிரம் ஏக்கரில் இவ்வருடம் பரசூட் முறைமையில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்களை பாத்திகளில் முளைக்கச் செய்து பின்னர் பதப்படுத்திய வயலில் அதனை வீசி எறியும் முறையின் ஊடான பயிர்செய்கை பரசூட் முறைமையென அழைக்கப்படுகிறது. இந்த விவசாய செய்கை முறையினை விரிவாக்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்மூலம் சிறந்த அறுவடையை எய்துவது நோக்கமாகும். இதற்காக விவசாயிகளுக்கு நவீனரக பாத்தி கட்டமைப்பு இலவசமாக வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. பரசூட் விவசாய செய்கையின் மூலம் உரம், கிருமிநாசிகளின் செலவுகளை குறைக்க முடியும். Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image