Home » 20ஆம் திகதி தனி விமானத்தில் இலங்கை வருகிறார் கோட்டாபய ராஜபக்ஷ

20ஆம் திகதி தனி விமானத்தில் இலங்கை வருகிறார் கோட்டாபய ராஜபக்ஷ

Source

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி தாய்லாந்தில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் அன்றைய தினம் அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள கோட்டாபய அவரது ஹோட்டல் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதேவேளை, கடந்த மாதம் முதல் கோட்டாபயவின் பயணங்களுக்கு பிரத்தியேக ஜெட் விமானங்கள் யார் கொடுத்தார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், சட்டத்தரணிகள் குழுவொன்று அரசாங்கத்திடம் எதிர்காலத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image