இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா இந்திய கடலோரக் காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கைக்கு அதிகப்படியான கஞ்சாவை கடத்திச் செல்ல இருப்பதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து மண்டபம் வந்த அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து ரோந்து பணியை மேற்கொண்டனர்.
இதன்போது நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு படகை பிடித்து சோதனை செய்தபோது படகில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கஞ்சாவையும்,படகையும் பறிமுதல் செய்ததுடன் படகில் இருந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
அப்போது கஞ்சாவை பெற்றுக் கொள்வதற்காக இந்திய கடலுக்குள் வந்த இலங்கை படகு ஒன்று இந்திய கடலோர காவல் படையின் கப்பலைக் கண்டு மீண்டும் இலங்கைக்குள்ளையே சென்று விட்டதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ என்றும் மேலும் 500 கிராம் ஆசிஸ் ஆயில் இருந்ததாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு அதிகப்படியான கஞ்சாவை கடத்திச் செல்ல இருப்பதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து மண்டபம் வந்த அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து ரோந்து பணியை மேற்கொண்டனர்.
இதன்போது நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு படகை பிடித்து சோதனை செய்தபோது படகில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கஞ்சாவையும்,படகையும் பறிமுதல் செய்ததுடன் படகில் இருந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
அப்போது கஞ்சாவை பெற்றுக் கொள்வதற்காக இந்திய கடலுக்குள் வந்த இலங்கை படகு ஒன்று இந்திய கடலோர காவல் படையின் கப்பலைக் கண்டு மீண்டும் இலங்கைக்குள்ளையே சென்று விட்டதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ என்றும் மேலும் 500 கிராம் ஆசிஸ் ஆயில் இருந்ததாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.