7 நிலக்கரிக் கப்பல்கள் இலங்கைக்கு வருகிறது
நிலக்கரி ஏற்றிய 7 கப்பல்கள் நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமயசேகர தெரிவித்துள்ளார். முதலாவது கப்பல் இன்று நாட்டை வந்தடையும். மற்றுமொரு கப்பல் நாளை வரவுள்ளது. ஏனைய ஐந்து கப்பல்கள் முறையே 13ஆம், 20ஆம், 23ஆம், 27ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன. இந்த நிலக்கரிக் கப்பல்கள் புத்தளம் துறைமுகத்தை வந்தடையவுள்ளன. அதன் பின்னர் இவை நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும். நுரைச்சோலை மின்நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை தடங்கலின்றி வழங்க முடியும் என நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.