Home » உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

Source

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல், உடனடியாக இலங்கைக்கு அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தையில் நிலவும் விசேட சூழ்நிலையை பயன்படுத்தி நுகர்வோரை சுரண்ட யாரேனும் முயற்சித்தால், அதற்கு எதிராக கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பொருளாதார நிலைமை குறித்து சிலர் தவறான விளக்கங்களை வழங்கி வருவதாகவும், அவற்றை திருத்த நேரம் செலவிட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கும் டொலர் வருவாய்களையும், ஏற்றுமதியாளர்கள் கையிருப்பில் வைத்துள்ள டொலர்களையும் ரூபாயாக மாற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு செய்யாவிட்டால், இந்த பிரச்சினையின் பாதிப்பை அவர்களே எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் வசந்த சமரசிங்க வலியுறுத்தினார்.

The post உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both