Home » அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு கொரியா ஒத்துழைப்பு

அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு கொரியா ஒத்துழைப்பு

Source

இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

குறித்த வங்கியின் அதிகாரிகள் குழு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதி ஒத்துழைப்பு 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டன.

அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு சலுகை வட்டியில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கொரிய அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது தெரிவித்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் நிதியுதவி வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image