Home » இலங்கையில் இருந்து கடத்திய 17.5 கிலோ தங்கம் தமிழகத்தில் சிக்கியது.

இலங்கையில் இருந்து கடத்திய 17.5 கிலோ தங்கம் தமிழகத்தில் சிக்கியது.

Source
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கம் நடுக்கடலில் வீசப்பட்ட நிலையில் நீண்ட தேடுதலின் பின்பு 17.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ராமநாதபுரம்  மண்டபம் அருகே நடுக்கடலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ளான தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதான இரகசிய தகவலின் பெயரில் சுங்க அதிகாரிகள் ஓர் படகை மடக்கியுள்ளனர். இதன்போது கடத்தல்காரர்  தங்கத்தை கடலில் வீசித் தப்ப முயன்ற சமயம் படகு இந்திய கரையோர காவல்படை மற்றும் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் கடத்திச் சென்ற  தங்கக் கட்டிகளே இவ்வாறு  கடத்தல் காரர்களால்  கடலில் வீசிய  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இந்திய கடற்படையினரின் சுழியோடிகளின் துணையோடு தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்திச் சென்றதாகவும்  இருவரை இந்திய அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தினர். கைது செய்யப்பட்ட மண்டபத்தை அடுத்த வேதாளை பகுதியைச் சேர்ந்த இருவரின் தகவலையடுத்து நீண்ட தேடுதலின் பின்பு ஒரு பொதி கடலில் இருந்து மீட்கப்பட்டு சோதனை செய்ததில் 17.5 கிலோ தங்கம் இருப்பதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றது. TL
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image