Home » உலக தபால் தினத்தை முன்னிட்டுஇ நினைவுதின முத்திரை

உலக தபால் தினத்தை முன்னிட்டுஇ நினைவுதின முத்திரை

Source

உலக தபால் தினத்தன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய உத்தியோகபூர்வ முத்திரைகள் வெளியிடப்படவில்லை என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

உலக தபால் தினத்தை முன்னிட்டு, சர்வதேச தபால் சங்கத்தின் உறுப்பு நாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்ட நினைவுதின முத்திரைகள் மாத்திரமே அவர்களது உருவப்படத்துடன் வெளியிடப்பட்டிருப்பதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எந்தவொரு நபருக்கும் தமது உருவப்படங்களுடன் கூடிய நினைவுதின முத்திரையை அச்சிடுவதற்கான வசதியை தபால் திணைக்களம் அண்மைக் காலமாக வழங்கி வருகிறது.

இவ்வாறான முத்திரைகளை நினைவு பரிசாக வழங்கக்கூடிய நினைவுதின முத்திரையாக மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image