எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என ஐக்கிய குடியரசு முன்னணி அறிவிப்பு
தமது கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில்இ தமக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதியுள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் பொருத்தமான வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
கட்சி என்ற ரீதியில் தனியாக தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை எனவும் கூட்டணியில் உள்ளவர்களின் இணக்கப்பாட்டுடனே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் இளம் சமூதாயத்திற்காகவும் தீர்மானங்களை எடுக்க இது ஒரு சந்தர்ப்பம் எனவும் பாட்லி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
2028ஆம் ஆண்டில்இ நாடு தனது வெளிநாட்டு கடனை ஒரே நேரத்தில் செலுத்த வேண்டும். எந்த ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தாலும் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தச் செயற்பாட்டுக்குத் தகுதியான அரசாங்கத்தை அமைப்பது மக்களின் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்;;டினார்.