Home » டிக்கோகார்சியாவில் உள்ள ஈழத் தமிழர் உண்ணா விரதப் போராட்டம்.

டிக்கோகார்சியாவில் உள்ள ஈழத் தமிழர் உண்ணா விரதப் போராட்டம்.

Source
ந.லோகதயாளன். டிக்கோகார்சியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் ஐவர்  தம்மை பிரித்தானியா பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதனால் சிகிச்சைக்காக  ரூவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து கனடா செல்லும் நோக்கில் 2021-03- 21இல் இலங்கையில் இருந்து 63 பேர் இந்தியா பயணித்து இந்தியாவில் தங்கியிருந்த 20 இலங்கையர்  அடங்களாக மொத்தம் 89 பேர் 2021-09-23  இந்தியாவின்  கொல்லத்தில் இருந்து  புறப்பட்டு 12 நாள் பயணித்தபோது  படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக  2021-10-04 இல் டிக்கோகார்சியா தீவில்  தஞ்சமடைந்தனர். இவ்வாறு தஞ்சமடைந்தவர்களை டிக்கோகார்சியாத்தீவில் உள்ள பிரித்தானியப்படைகள் அடைக்கலம் வழங்கி பராமரித்து வருகின்றபோதும் அவர்கள் விரும்பும் நாட்டில் அவயம் அளித்து வாழ அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் டிக்கோகார்சியா தீவில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில்  ரெண்ட்கொட்டகை  முகாமிலேயே பராமரிக்கப்பட்டனர். இவ்வாறு வாழ்ந்த மக்கள் 17 மாதங்களாக தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கும் மன அழுத்தம் காரணமாக தமக்கு பிரித்தானியா அவயம் அளிக்க வேண்டும் என விடுத்த தொடர் கோரிக்கை ஏற்கப்படாதமையினால் ஐவர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.் இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற ஐவரும் சிகிச்சைக்காக ருவாண்டா நாட்டிறகு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தற்கொலைக்கு முயன்ற ஐவரில் இருவர் கடந்த 12 திகதியும் மேலும் மூவர் 16 திகதியும தற்கொலைக்கு முன்றபோதே விமானங்களில் ருவாண்டா கொண்டு செல்லப்பட்டுள்ளதாக டிக்கோகார்சியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள உறவுகளிற்கு தகவல் வழங்கியுள்ளனர். TL
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image