Home » தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.

Source
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் என சந்தேகிக்கப்படுவோரால் கடும் தாக்குதலை மேற்கொண்டதால் பாதிக்கப்பட்டதாக 5 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகைபட்டினத்தில் இருந்து நேற்றைய தினம் மீன்பிடிக்க ஓர் படகில் கடலிற்கு புறப்பட்ட  மீனவர்களை இலங்கை கடற்படையினரின் சீருடையில் ஆயுதங்கள் சகிதம் அண்மித்த பெரும் படகில் பயணித்தவர்களே தமிழக மீனவர்களை 4 மணிநேரம் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நடுக்கடலில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 5 தமிழக மீனவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்ட சீருடையினர் 24 இலக்கம் பொறிக்கப்பட்ட கப்பலில் பயணித்ததாக தமிழக  மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் இவ்வாறு  கடுமையான தாக்குதலிற்கு இலக்கான நாகைபட்டின மீனவர்கள்  மயிலாடுதுறை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேநேரம் இத் தாக்குதலை இலங்கை கடற்படையினரே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்தமையினால் தமிழக கரையோர மாவட்டத்தில் பதற்றம் நிலவுகின்றது. TL
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image