Home » பிரதமர் அமைச்சர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி அவசியம்

பிரதமர் அமைச்சர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி அவசியம்

Source

அரச நிறுவனங்களால் நடத்தப்படும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரதமர் அல்லது அமைச்சர்களின் புகைப்படங்களையும், செய்திகளையும் பயன்படுத்துவதற்கு முன்னர், அதற்கான அனுமதியை பெற வேண்டும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதன்படி, அதற்கான அனுமதி, பிரதமர் அலுவலகத்திடம் இருந்து எழுத்து மூலம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதியைப் பயன்படுத்தி அரசாங்க நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்வுகளும், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக இருக்க வேண்டும் என பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபன சபைகள் உள்ளிட்ட நிறுவன பிரதானிகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image