Home » பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடல்

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடல்

Source

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் புதிய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார குழுக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

நிதித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் ரூபா விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் – இலங்கைக்கும் இடையிலான வேலைத்திட்டம் தொடர்பில் மீளாய்வு ஒன்றும் இதன்போது நடத்தப்பட்டது.

அதன் எதிர்கால செயற்பாடுகளுக்கான திட்டங்கள் இங்கு முன்வைக்கப்பட்டன. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்களை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டினார்கள்.

இலங்கை தொடர்பில் நேர்மறையான அணுகுமுறைகளையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இது பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்கு இலங்கையின் செயற்பாடு ஒரு தீர்க்கமான நடவடிக்கை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image