Home » மூன்றாவது மீளாய்வுக்கான காலம் விரைவில் அறிவிப்பு.

மூன்றாவது மீளாய்வுக்கான காலம் விரைவில் அறிவிப்பு.

Source

சர்வதேச நாணய நிதியத்துடன் அமுல்படுத்தப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் மூன்றாவது மீளாய்வுக்கான காலம் அடுத்த சில தினங்களுக்குள் அறிவிக்கப்படுமென, சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான உயர்மட்டக் குழு, தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன், இவர்கள் ஜனாதிபதி மற்றும் அவரது புதிய பொருளாதார குழுவை சந்தித்துள்ளனர்.

பிரதிநிதிகள் குழு அதிகாரிகளுடன் சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் அவர்களின் பொருளாதார சீர்திருத்த நோக்கங்கள் குறித்து இவர்கள் கலந்துரையாடியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புதுறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு துறையின் பணிப்பாளர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image