வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆழமற்ற கடற்பகுதியில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஏற்றுமதியை இலக்காக கொண்டு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு செலாவணியை அதிகரித்தல், மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, கருத்திட்டமொன்று இலங்கை தேசிய நீர் உயிரின அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த கருத்திட்டத்திற்காக, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் ஐயாயிரம் ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 100 ஏக்கர்களுடன் கூடிய கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
